வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர்: வங்கி கடன் வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இமையம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் மாசிலாமணி. இவர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வங்கி கடன் வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு. உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இமையம் கல்வி அறக்கட்டளை நடத்தி வருபவர் மாசிலாமணி. இவர் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வங்கி கடன் வாங்கித் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.70 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பல முறை காவல் நிலையத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு. உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.