நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜீன் 5-ம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடவு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் வாரம் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு ''க்ரீன் கலாம்'' என்னும் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு இது நாள் வரை 29 லட்சம் 'மரங்களை நடவு செய்துள்ளேன்.

மேலும், வரும் ஜூன் 5-ம் தேதி நீலகிரி வனத்துறை அளிக்கவுள்ள இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நீலகிரியில் நடுவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.
பள்ளி மாணவர்கள் நீலகிரியை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகள் இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும்போது வேண்டும் என்றே பிளாஸ்டிக் பையில் போட்டுத் தரும்படி கேட்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது." என்றார்.

உதகையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடவு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பள்ளி குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் வாரம் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கடந்த 2010-ம் ஆண்டு ''க்ரீன் கலாம்'' என்னும் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு இது நாள் வரை 29 லட்சம் 'மரங்களை நடவு செய்துள்ளேன்.

மேலும், வரும் ஜூன் 5-ம் தேதி நீலகிரி வனத்துறை அளிக்கவுள்ள இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நீலகிரியில் நடுவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.
பள்ளி மாணவர்கள் நீலகிரியை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைகள் இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இங்கு உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும்போது வேண்டும் என்றே பிளாஸ்டிக் பையில் போட்டுத் தரும்படி கேட்டேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது." என்றார்.