திருப்பூரில் வெடிஉப்பு விற்பனை கடையில் பயங்கர தீவிபத்து

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெடிஉப்பு விற்கப்படும் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கிறது ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். இக்கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தும் உப்பு பொட்டிலங்களை விற்பனை செய்யும் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கடையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில், பயங்கர வெடி சத்தத்துடன் பற்றத் துவங்கிய தீ, பின்னர் கொளுந்துவிட்டு எரிந்து கடை முழுவதையும் தீக்கிறையாக்கியது. பின்னர், அருகிலிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைக்குள் பொட்டாசியம் நைட்ரைடு மற்றும் பெரியம் நைட்ரைடு ஆகியவை இருந்ததால் தீகொளுந்து விட்டு எரிந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் மூலம் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநகரின் மிக முக்கியப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...