சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது - கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.


கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாகவும், காவல் துறை மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று காலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நந்தகுமார் வீட்டிற்கு இன்று வந்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது போன்று, தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவங்களுக்கு காவல் துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. நக்சலைட் நடமாட்டம் அதிகரித்துள்ளது, தீவிரவாத இயக்கங்கள் செயல்பாடு வெளிப்படையாக நடைபெறுகிறது.

பா.ஜ.க. மீது நடைபெறும் தொடர் தாக்குதல்கள் கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத காவல் துறை கண்டித்தும் வரும் 23-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சட்டம்- ஒழுங்கை சரி வர நிலைநாட்ட, தமிழக முதலமைச்சர் காவல்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டும். பா.ஜ.க நிர்வாகிகள் யார் யார்க்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதை காவல் துறை கண்டறிந்து, உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். 

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. இங்கு ரத யாத்திரை அமைதியாக நடைபெற்று வருகிறது. எதிர்க் கட்சிகள் தான் இதனை அரசியல் செய்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...