காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.
கோவை: காயமடைந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் உணவுப் பொருட்கள் மூலம் மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படியில் மாங்கரை வனப் பகுதிக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, அரசி உருண்டைகளில் காயத்திற்கான மருந்துகளைக் கலந்து அந்த காட்டு யானை வரும் பாதையில் வனத்துறை அதிகாரிகள் வைத்தனர். தற்போது அந்த கட்டு யானை உணவுகளை உட்கொண்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மனோகரன் மூலம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு பிடித்தமான உணவு வகைகளில் காயத்திற்கான மருந்தை கலந்து கொடுக்கப்பட்டது." என்றார்.
யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அதனால் உணவுப் பொருட்களை கூட உண்ண முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட வனப் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வாயில் காயத்துடன் உலா வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படியில் மாங்கரை வனப் பகுதிக்குள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, அரசி உருண்டைகளில் காயத்திற்கான மருந்துகளைக் கலந்து அந்த காட்டு யானை வரும் பாதையில் வனத்துறை அதிகாரிகள் வைத்தனர். தற்போது அந்த கட்டு யானை உணவுகளை உட்கொண்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷ் கூறுகையில், காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மனோகரன் மூலம் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானைக்கு பிடித்தமான உணவு வகைகளில் காயத்திற்கான மருந்தை கலந்து கொடுக்கப்பட்டது." என்றார்.
யானைக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அதனால் உணவுப் பொருட்களை கூட உண்ண முடியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.