தடையை மீறி கோவையில் 'பஸ் டே' கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது.


கோவை: 'பஸ் டே' என்ற பெயரில், ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலும், பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டு வந்தது. இதனால், நகரின் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 'பஸ் டே' கொண்டாடுவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், சில ஆண்டுகளுக்கு முன் தடை விதித்தது. தடையை மீறும் மாணவர்களைக் கைது செய்யவும், போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை மீறி, இந்த ஆண்டிலும் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக கோவை வரும் தனியார் பேருந்து ஒன்றுக்கு வண்ண காகிதங்கள் ஒட்டி, மேளதாளங்களுடன் பவனி வந்தனர். மேலும், விமான நிலையம் தொடங்கி, நவ இந்தியா சிக்னல் வரை பேருந்தின் மீது ஈறி நடனமாடிய படி வந்தனர். இது பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளையும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் அச்சப்பட வைத்தது.



உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...