கோவையில் உலக சிட்டுக் குருவி தினத்தை கொண்டாடிய குழந்தைகள்

உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

கோவை: உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 

சிறுமுகையை அடுத்த காந்தவயல் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் நேற்று சிறுமுகை வன அலுவலர்களுடன் சிட்டுக் குருவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வனத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிட்டுக் குருவி ஆர்வலர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். 



அப்போது, "சிட்டுக் குருவிகளுக்கு வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மரங்களில் கூடுகள் மற்றும் தானியங்களை வைக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறோம். அதனால், எங்கள் வீட்டின் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகளை காண முடிகிறது." என்றார்.



தொடர்ந்தது, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன், தாமஸ் சாமுவேல் மற்றும் எஸ். சரவணன் உள்ளிட்டோ சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரித்தனர். 

"நகர்ப்புற பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு, மரபுசார் வீடுகளை மறந்து கான்கிரீட் கட்டிடங்களே கட்டுவதே காரணம்." என்று பூமிநாதன் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...