உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
கோவை: உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிட்டுக் குருவியை காப்பதன் அவசியம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
சிறுமுகையை அடுத்த காந்தவயல் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் நேற்று சிறுமுகை வன அலுவலர்களுடன் சிட்டுக் குருவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வனத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிட்டுக் குருவி ஆர்வலர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

அப்போது, "சிட்டுக் குருவிகளுக்கு வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மரங்களில் கூடுகள் மற்றும் தானியங்களை வைக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறோம். அதனால், எங்கள் வீட்டின் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகளை காண முடிகிறது." என்றார்.

தொடர்ந்தது, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன், தாமஸ் சாமுவேல் மற்றும் எஸ். சரவணன் உள்ளிட்டோ சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரித்தனர்.
"நகர்ப்புற பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு, மரபுசார் வீடுகளை மறந்து கான்கிரீட் கட்டிடங்களே கட்டுவதே காரணம்." என்று பூமிநாதன் கூறினார்.
சிறுமுகையை அடுத்த காந்தவயல் பகுதியில் செயல்படும் அரசு பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் நேற்று சிறுமுகை வன அலுவலர்களுடன் சிட்டுக் குருவி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக வனத்துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிட்டுக் குருவி ஆர்வலர் குருசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

அப்போது, "சிட்டுக் குருவிகளுக்கு வாழ்வதற்குத் தகுந்தாற்போல் மரங்களில் கூடுகள் மற்றும் தானியங்களை வைக்க வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இதனைச் செய்து வருகிறோம். அதனால், எங்கள் வீட்டின் அருகில் ஏராளமான சிட்டுக் குருவிகளை காண முடிகிறது." என்றார்.

தொடர்ந்தது, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் டி.பூமிநாதன், தாமஸ் சாமுவேல் மற்றும் எஸ். சரவணன் உள்ளிட்டோ சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விவரித்தனர்.
"நகர்ப்புற பகுதிகளில் சிட்டுக் குருவிகள் காணாமல் போனதற்கு, மரபுசார் வீடுகளை மறந்து கான்கிரீட் கட்டிடங்களே கட்டுவதே காரணம்." என்று பூமிநாதன் கூறினார்.