கோவையில் பா.ஜ.க., பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

கோவை மாவட்ட பா.ஜ.க., தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட இரு பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்ட பா.ஜ.க., தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட இரு பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க., தேசிய செயலர் எச்.ராஜாவின் பெரியார் சிலை குறித்த சர்ச்சை கருத்திற்கு பிறகு, கடந்த 7-ம் தேதி பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர். நந்தகுமார் வீட்டிலும் அவரது காரை பெட்ரோலை ஊற்றி தீ பற்றவைத்துள்ளனர்.



அதேபோல, செல்வபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் உமாபதி என்பவர் வீட்டிலும் சுமார் 4.30 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் உமாபதியின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் சேதமடைந்தது. அதிகாலை என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு சம்பவமும் ஒரே நபர்களாக இருக்குமோ என்ற கோணத்தில் பீளமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைத்ததின் எதிர்வினையாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.



இது குறித்து கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறியதாவது:- பா.ஜ.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசபட்டதை அடுத்து தற்போது எனது வீட்டில் நடந்த சம்பவம் கண்டனத்திற்கு உரியது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜனிடம் பேசியுள்ளோம். அவர், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இந்த பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...