டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் கோவையைச் சேர்ந்த யோகா பாட்டி நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதைக் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார்.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் கோவையைச் சேர்ந்த யோகா பாட்டி நானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதைக் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கிக் கவுரவிக்கிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.
இசைஞானி இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் வழங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருதும், மதுரையைச் சேர்ந்த ராஜகோபால் வாசுதேவனுக்கும், நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும், கோவையைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் நானம்மாளுக்கும், சென்னை பாம்பு பண்ணையை நிறுவிய ரோமுலஸ் விடாகருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகளும் தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமிக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.