ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் மெஷின்கள் வழங்கி உதவி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை சார்பில் நலிவடைந்த ஆதரவற்ற பெண்களுக்கு 40 தையல் மெஷின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.


கோவை : ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர கிளை சார்பில் நலிவடைந்த ஆதரவற்ற பெண்களுக்கு 40 தையல் மெஷின்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 



லிபாஸ் தையல் பயிற்சி மையம் மூலம் மத்திய அரசின் சான்றிதழுடன் இலவச தையல் பயிற்சியை ஜமாஅத்தே வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சமூகத்தில் நலிவடைந்த 40 பெண்களுக்கு இலவச தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. இதில், கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் தலைவர் ஜனாப். பி.எஸ். உமர் பாரூக் கலந்து கொண்டு அவற்றை வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- கடந்த 70 ஆண்டுகளாக ஜமாஅத்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. ரூ. 20-க்கு மருந்துகளுடன் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. விளம்பரங்கள் இல்லாமல் பல சமூக சேவைகளை செய்து வருகிறோம், என்றார்.



கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை பிரிவின் துணை மாவட்ட ஆட்சியர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், "சிறுபான்மையினர் நலத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதை கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தாட்கோ மூலம் தொழில் தொடங்கக் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது," இவ்வாறு பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...