மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு

திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. 



தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர், கடந்த 19 வருடமாக மின்வாரிய ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் உள்ள சுமார் 60 அடி உயரம் கொண்ட (110 கேவி) உயர் மின் அழுத்தம் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தனது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரது பணி நிரந்தர கோரிக்கை குறித்த பரிசீலிப்பதாக உறுதியளித்ததின் பேரில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் கோபுரத்தில் இருந்த ராஜகோபால் கீழே இறங்கி வந்தார். பின்பு, போலீசார் விசாரணைக்காக, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மின்வாரிய ஊழியரே மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...