5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கோவை : 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தென் மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர், லோட்டஸ் கிளப் சின்ன தடாகம், பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சூர் செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் லீக் சுற்றில் முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளன.
இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தென் மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர், லோட்டஸ் கிளப் சின்ன தடாகம், பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சூர் செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் லீக் சுற்றில் முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளன.
இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.