பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் : வதந்தியால் பரபரப்பு

பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


கோவை : பிரியா வாரியரை போல கண்ஜாடை செய்யும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தவறான தகவல்களை பரப்பி வருவதாக வி.எல்.பி. கல்வி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 



மலையாள நடிகை பிரியா வாரியர் தனது கண் அசைவால் ஒரே நாளில் நாடு முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்து விட்டார். அவர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடல் சமீபத்தில் வெளியானது. அதில், பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்துள்ளது. இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் வி.எல்.பி., கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வகுப்பில் அதே வேலையை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் கல்லூரியின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பிரியா வாரியரை போல கண் ஜாடை செய்யும் மாணவிகள், ஒருவருடம் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த உத்தரவு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 



இந்த நிலையில், பிரியா வாரியரைப் போல கண்வித்தைக் காட்டும் மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற தகவலுக்கு வி.எல்.பி. கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெளிநாட்டுப் பானங்கள் கல்லூரி வளாகத்தில் விற்பனை செய்யப்படாது என்றும், புத்துணர்வு பானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையைத் திரித்து தவறான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...