கவுரவ வனப் பாதுகாவலர்களை நீக்குமாறு மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை

முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களை சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மலை மாவட்டமமான நீலகிரியில், அதே சமயம் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டது. குறிப்பாக, முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் போன்ற பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்டது. அதேசமயம், இப்பகுதியில் காலம் காலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முதுமலை வன விலங்கு சரணாலயத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1968-ம் ஆண்டு 5 மைல்தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்தது. இதில், முதுமலை வன விலங்கு சரணாலயம் மட்டுமின்றி, 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் சுற்றுவட்டார பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்தது. இதில், பொதுமக்கள் வாழும் மசினகுடி உள்ளிட்ட சில கிராமங்களும் வந்தன. மக்கள் வாழும் மற்றும் விவசாயம் செய்யும் 46 ஆயிரம் ஏக்கர் நிலமும் அடங்கும். 

கடந்த 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட பகுதிக்குள் வரும் நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் பதிவு செய்ய முடியாது. விற்பனை செய்யவோ அல்லது வாங்கவோ முடியாது என்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதால், அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. 

இந்நிலையில், 2009-ம் ஆண்டு திடீரென மாவட்ட நிர்வாம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மாவட்ட நிர்வாகம் அனுமதி பெறாமல் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை செய்த பத்திர பதிவுகள் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இது மசினகுடி பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின், இப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வழக்கில் இவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. மாறாக இவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. மேலும், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டங்களில் கவுரவ வனப்பாதுகாவலர்களை நீக்க வேண்டும் என 16 அமைப்புக்களைச் சேர்ந்த மசினகுடி மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...