'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: 'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரத யாத்திரை தமிழகத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கைது செய்தனர்.
இதே போல், கோவை உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரத யாத்திரை தமிழகத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கைது செய்தனர்.
இதே போல், கோவை உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.