ரத யாத்திரை விவகாரம் : கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் போராட்டம்

'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: 'ராம ராஜ்ய ரத யாத்திரை'யை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களைக் கடந்து இன்று தமிழகம் வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போலீசார் அவர்களைக் கைது செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் மனித நேய மக்கள் கட்சியினர் மற்றும் த.மு.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ரத யாத்திரை தமிழகத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்று கோஷங்களை எழுப்பிய நிலையில் அங்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். 

இதேபோல், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திராவிட கழகம் போன்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை கைது செய்தனர். 

இதே போல், கோவை உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...