ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகத்தில் ரத யாத்திரை வாகனம் நுழைவதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.,வினர், செயல்தலைவர் ஸ்டாலினின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரதயாத்திரை வாகனம் தமிழகத்தில் நுழைந்ததைக் கண்டிக்கும் வகையிலும் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்டோர் உதகையில் மறியல் செய்யும் போது கைது செய்யப்பட்டனர். இதேபோல, பந்தலூர் பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...