சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி: சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ரத யாத்திரை வாகனம் நுழைவதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.,வினர், செயல்தலைவர் ஸ்டாலினின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரதயாத்திரை வாகனம் தமிழகத்தில் நுழைந்ததைக் கண்டிக்கும் வகையிலும் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்டோர் உதகையில் மறியல் செய்யும் போது கைது செய்யப்பட்டனர். இதேபோல, பந்தலூர் பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ரத யாத்திரை வாகனம் நுழைவதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.,வினர், செயல்தலைவர் ஸ்டாலினின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களைக் கைது செய்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரதயாத்திரை வாகனம் தமிழகத்தில் நுழைந்ததைக் கண்டிக்கும் வகையிலும் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்டோர் உதகையில் மறியல் செய்யும் போது கைது செய்யப்பட்டனர். இதேபோல, பந்தலூர் பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.