உதகையில் கட்டுமானப் பணியின் போது மண் சரிந்ததில் தொழிலாளி பலி

நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்த விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 



உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள வண்டிசோலை பகுதியில் பழைய வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 10-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட மண்ணை லாரியிலிருந்து மண்ணை இறக்கும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பணியில் அத்திக்கல் கிராமத்தைச் சேர்ந்த துரை (55) என்பவரும் இருந்துள்ளார். 

மண் இறக்குவதற்காக மண்வெட்டி தேவைப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் துரையிடம் மண்வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, சுவர் அமைப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இருந்து மண்வெட்டி எடுக்க அவர் சென்றுள்ளார். அப்போது, திடீரென மண் சரிந்து துரையின் மேல் விழுந்துள்ளது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் துரையின் மேல் மூடியிருந்த மண்ணை அகற்றினர். தொடர்ந்து, ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில், அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...