கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி, நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வரும் நிலையில், வாரச் சந்தை என்ற பெயரில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் பெரும் வியாபார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:-
வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தைப் பாதிப்பு அடையச் செய்கிறது. மேலும், வியாபாரிகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.