கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.
கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா தரப்பில் பரோல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கான பணிகளை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். அங்கு தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். பின்னர், 16 நாள் காரியங்கள் முடிவடைந்த பின்னர், சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே இந்த முறையும் விதிக்கப்பட்டு உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா தரப்பில் பரோல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கான பணிகளை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, 15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். அங்கு தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். பின்னர், 16 நாள் காரியங்கள் முடிவடைந்த பின்னர், சசிகலா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே இந்த முறையும் விதிக்கப்பட்டு உள்ளது.