ரதயாத்திரைக்கு எதிர்ப்பு: கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரை தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று வலியுறுத்தி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். 

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 'ராம ராஜ்ய ரத யாத்திரை' அயோத்தியில் தொடங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று தமிழகம் வருகிறது. நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பளிக்கப்படுகிறது. 

இந்த ரத யாத்திரைக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, எதிர்ப்பு தெரிவிப்போரை கைது செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



நேற்று மாலை 6 மணியில் இருந்து வரும் 23-ம் தேதி காலை மணி வரையிலும் நெல்லை மாவட்டத்தில் 144 போலீஸ் தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

கோவை

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதரீதியில் இந்தியாவை ஆட்சி செய்ய பா.ஜ.க அரசு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய அவர்கள், ஒன்று பட்ட இந்தியாவை சீர் குலைக்கும் விஸ்வ இந்து பரிஷத்-க்கு எதிராக போராட்டம் தொடரும் என்றனர்.

சாலை மறியல் தொடர்பான தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 116 பேரை கைது செய்தனர். இதே போல் உக்கடம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...