புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் இருந்து ஈ.வே. ராமசாமியின் சிலை அகற்றப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
சிலை சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலைப் பகுதியை தனியாக பெர்யர்த்து எடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.
கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் இருந்து ஈ.வே. ராமசாமியின் சிலை அகற்றப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
சிலை சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலைப் பகுதியை தனியாக பெர்யர்த்து எடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.