திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பெத்திசெட்டிபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி பின்னலாடை நிறுவனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த நைஜீரியர்கள் சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டி அவ்வழியே கணவருடன் வந்த கர்ப்பிணி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், நைஜீரியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறி விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை பொதுமக்கள் தாக்கியதோடு அவர்கள் பணிபுரியும் பின்னலாடை நிறுவனத்தை முற்றுகையிட்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து நைஜீரியர்களை மீட்டு விசாரணைக்காக வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பெத்திசெட்டிபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி பின்னலாடை நிறுவனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த நைஜீரியர்கள் சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டி அவ்வழியே கணவருடன் வந்த கர்ப்பிணி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், நைஜீரியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறி விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை பொதுமக்கள் தாக்கியதோடு அவர்கள் பணிபுரியும் பின்னலாடை நிறுவனத்தை முற்றுகையிட்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து நைஜீரியர்களை மீட்டு விசாரணைக்காக வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.