உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தார்.
சென்னை: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் தானமாக பெற்று அவருக்கு பொருத்தப்பட்டதையடுத்து சற்று உடல் நலன் தேறினார்.
பின்னர், உறவினர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று திடீரென நடராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடராஜன் இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

கணவர் மரணமடைந்ததால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா 15 நாட்கள் பரோல் வேண்டி விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே சசிகலா தரப்பில் இருந்து பரோல் கோரப்பட்டதும், சிறை நிர்வாகம் அதை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.