இன்றிரவு, அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஆளுனர், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கோவை: தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று கோவை வந்துள்ளார்.
திருச்சூர் எக்ஸ்பிரஸ் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த ஆளுனரை, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து மற்றும் புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.
இன்றிரவு, அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஆளுனர், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குறிப்பாக, நாளை காலை 10 மணிக்கு கோவை குமரகுரு கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் 11 மணியளவில் பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.
தமிழக ஆளுனர் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சூர் எக்ஸ்பிரஸ் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்த ஆளுனரை, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பூங்கொத்து மற்றும் புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.
இன்றிரவு, அவினாசி ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் ஆளுனர், நாளை (செவ்வாய்க்கிழமை) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
குறிப்பாக, நாளை காலை 10 மணிக்கு கோவை குமரகுரு கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் 11 மணியளவில் பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.
தமிழக ஆளுனர் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.