குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி

குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி


கோவை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர் கே.சி.பழனிசாமி மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். 

அப்போது பேசிய கே.சி.பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுகவினர் நாடாளுமன்றத்தில் தினமும் ஆர்ப்பாட்டம் செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தார்.



மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தருமென்ற நம்பிக்கை இல்லை என கூறினார். அதிமுக விதிப்படி பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையை மாற்ற பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை எனவும், அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஒபிஎஸ், இபிஎஸ் ஏமாற்றி கொண்டிருக்கின்றனர் என கூறியவர்.

சசிகலாவை அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென்பதே தர்மயுத்ததின் நோக்கம் என்ற ஒ.பன்னீர்செல்வம், ஏன் இதுவரை சசிகலா நீக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அதிமுகவை ஒபிஎஸ், இபிஎஸ் சிதறடித்து வருகின்றனர் எனவும், ஒபிஎஸ்-யை நம்பி இலட்சக்கணக்கான தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கே.சி.பழனிசாமி கூறினார்.

இதன் பின்னர் பேசிய அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் சின்னசாமி பேசுகையில் எந்த புகாரும் குற்றச்சாட்டும் தன் மீது இல்லை எனவும், அண்ணா தொழிற்சங்கத்தில் செய்த செலவுகளுக்கு கணக்கு உள்ளது எனவும் கூறிய சின்னசாமி, 10 இலட்ச ரூபாய் கையாடல் என்பது அபாண்டமான புகார் என தெரிவித்தார். மேலும் மாற்றுக்கட்சிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்தவர். டிடிவி தினகரனுடன் அணிக்கு செல்வேன் என அவர் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...