நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வீடியோ

திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.



திருப்பூர்: திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. 

திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (23). ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவரது பாலமுருகனின் தம்பி வெங்கடேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன் பகை இருந்ததாக தெரிகிறது. இதில் பாலமுருகனும் தலையிட்டுள்ளார். 

இந்த சூழலில், நேற்று மாலை பவானி நகர் பகுதியில் சென்ற பாலமுருகனை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...