கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தின் வாசலை அடைத்து, மாநகராட்சியால் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை அகற்ற வேண்டி, குடியிருப்புவாசிகள் மாநகராட்சி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தின் வாசலை அடைத்து, மாநகராட்சியால் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை அகற்ற வேண்டி குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சொத்து வரி, தண்ணீர் வரி என மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறிய நபர்களின் குடியிருப்பு மற்றும் கடைகளின் வாசலில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று, சுமார் 120 குடியிருப்புகள் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தில் உள்ள 10 நபர்கள் முறையாக வரி செலுத்தாததால் குடியிருப்பின் இரண்டு வாசல்களிலும் குப்பைகள் நிறைந்த குப்பைத் தொட்டிகளை வைத்துச் சென்றனர் மாநகராட்சி ஊழியர்கள்.
இந்த நடவடிக்கையால், வரி செலுத்தாத சிலரை தண்டிப்பதாக கூறி, முறையாக வரி செலுத்தும் அனைவரையும் மாநகராட்சி நிர்வாகம் தண்டித்து விட்டதாக அப்பகுதியில் குடியிருப்போர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "வரி செலுத்தாத நபர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தற்போது இங்கு தான் வசிக்கிறார்களா? என்று விசாரிக்கவுமில்லை. இரு தினங்களுக்கு முன் குடியிருப்பு வளாகத்தின் இரண்டு வாயில்களையும் அடைத்தவாறு துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளை வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாசலுக்கு அருகில் குடியிருப்போர் கடும் சிக்கல்களை சந்தித்து வந்தனர். மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வாசலைக் கடக்க வேண்டியிருந்தது." என்றார்.
இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்ட குடியிருப்பு வாசிகள், குப்பைத் தொட்டியை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"தண்டனை அளிப்பதாகக் கூறி, குடியிருப்பு வளாகத்தின் வாசலை மறைத்து குப்பைத் தொட்டி வைத்தால் அவசரத்திற்கு ஓர் ஆம்புலன்ஸ் உள்ளே வர வேண்டும் என்றால், எப்படி வர முடியும்? முறையாக வரி செலுத்தும் மற்றவர்களும் தண்டனை பெற வேண்டுமா? குப்பைத் தொட்டி வைப்பதற்கான உத்தரவை ஏன் மாநகராட்சி ஊழியர்கள் காட்ட மறுக்கின்றனர்?" என்ற பல்வேறு கேள்விகளை அடுக்கி குமுறலை வெளிப்படுத்தினார் மற்றொரு குடியிருப்புவாசி.
மாநகராட்சி ஊழியர்களிடம் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வாசலை ஆக்கிரமித்திருந்த குப்பைத் தொட்டிகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
வரி வசூல் செய்வதில் கடுமையான நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், அவை முறையாக வரி செலுத்துபவர்களை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
சொத்து வரி, தண்ணீர் வரி என மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த தவறிய நபர்களின் குடியிருப்பு மற்றும் கடைகளின் வாசலில் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிகளை வைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று, சுமார் 120 குடியிருப்புகள் அமைந்துள்ள சாய் அமரந்தா குடியிருப்பு வளாகத்தில் உள்ள 10 நபர்கள் முறையாக வரி செலுத்தாததால் குடியிருப்பின் இரண்டு வாசல்களிலும் குப்பைகள் நிறைந்த குப்பைத் தொட்டிகளை வைத்துச் சென்றனர் மாநகராட்சி ஊழியர்கள்.
இந்த நடவடிக்கையால், வரி செலுத்தாத சிலரை தண்டிப்பதாக கூறி, முறையாக வரி செலுத்தும் அனைவரையும் மாநகராட்சி நிர்வாகம் தண்டித்து விட்டதாக அப்பகுதியில் குடியிருப்போர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், "வரி செலுத்தாத நபர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் அளிக்கப்படவில்லை. அவர்கள் தற்போது இங்கு தான் வசிக்கிறார்களா? என்று விசாரிக்கவுமில்லை. இரு தினங்களுக்கு முன் குடியிருப்பு வளாகத்தின் இரண்டு வாயில்களையும் அடைத்தவாறு துர்நாற்றம் வீசும் குப்பைத் தொட்டிகளை வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால், வாசலுக்கு அருகில் குடியிருப்போர் கடும் சிக்கல்களை சந்தித்து வந்தனர். மேலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வாசலைக் கடக்க வேண்டியிருந்தது." என்றார்.
இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்ட குடியிருப்பு வாசிகள், குப்பைத் தொட்டியை அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"தண்டனை அளிப்பதாகக் கூறி, குடியிருப்பு வளாகத்தின் வாசலை மறைத்து குப்பைத் தொட்டி வைத்தால் அவசரத்திற்கு ஓர் ஆம்புலன்ஸ் உள்ளே வர வேண்டும் என்றால், எப்படி வர முடியும்? முறையாக வரி செலுத்தும் மற்றவர்களும் தண்டனை பெற வேண்டுமா? குப்பைத் தொட்டி வைப்பதற்கான உத்தரவை ஏன் மாநகராட்சி ஊழியர்கள் காட்ட மறுக்கின்றனர்?" என்ற பல்வேறு கேள்விகளை அடுக்கி குமுறலை வெளிப்படுத்தினார் மற்றொரு குடியிருப்புவாசி.
மாநகராட்சி ஊழியர்களிடம் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, வாசலை ஆக்கிரமித்திருந்த குப்பைத் தொட்டிகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.
வரி வசூல் செய்வதில் கடுமையான நடவடிக்கைகள் தேவைதான். ஆனால், அவை முறையாக வரி செலுத்துபவர்களை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.