இந்த ஆண்டு சிறப்பாக அமையும்: மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை நம்பிக்கை

நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை: நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோட்டர் சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாருதி சுஷிகி டிசர்ட் ஸ்ட்ரோம் 2018' என்ற தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல்சுற்று கோவையில் இன்று தொடங்கியது. இதில், டி.வி.எஸ்., அணிக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்ற இளம் வீராங்கனை பங்கேற்றுள்ளார்.

இந்த மோட்டர் சைக்கிள் பந்தயம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு இடர்பாடுகளால் போட்டியின் 2-வது நாளே வெளியேற நேரிட்டது. ஆனால், இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஆயத்தமாக உள்ளேன். நான் டி.வி.எஸ். அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," இவ்வாறு பேசினார்.

வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள இந்தப் போட்டி நேற்று நொய்டாவில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...