நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை: நடப்பாண்டில் நடக்கும் தேசிய அளவிலான பெண்கள் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என மோட்டர் சைக்கிள் பந்தய வீராங்கனை ஐஸ்வர்யா பிஷே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோட்டர் சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாருதி சுஷிகி டிசர்ட் ஸ்ட்ரோம் 2018' என்ற தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல்சுற்று கோவையில் இன்று தொடங்கியது. இதில், டி.வி.எஸ்., அணிக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்ற இளம் வீராங்கனை பங்கேற்றுள்ளார்.
இந்த மோட்டர் சைக்கிள் பந்தயம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு இடர்பாடுகளால் போட்டியின் 2-வது நாளே வெளியேற நேரிட்டது. ஆனால், இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஆயத்தமாக உள்ளேன். நான் டி.வி.எஸ். அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," இவ்வாறு பேசினார்.
வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள இந்தப் போட்டி நேற்று நொய்டாவில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோட்டர் சைக்கிள் பந்தயங்களில் மிக முக்கிய போட்டிகளில் ஒன்றான 'மாருதி சுஷிகி டிசர்ட் ஸ்ட்ரோம் 2018' என்ற தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதல்சுற்று கோவையில் இன்று தொடங்கியது. இதில், டி.வி.எஸ்., அணிக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) என்ற இளம் வீராங்கனை பங்கேற்றுள்ளார்.
இந்த மோட்டர் சைக்கிள் பந்தயம் குறித்து அவர் கூறுகையில்," கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு இடர்பாடுகளால் போட்டியின் 2-வது நாளே வெளியேற நேரிட்டது. ஆனால், இந்த ஆண்டில் சிறப்பாக செயல்படுவதற்காக ஆயத்தமாக உள்ளேன். நான் டி.வி.எஸ். அணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," இவ்வாறு பேசினார்.
வரும் 23-ம் தேதி முடிவடைய உள்ள இந்தப் போட்டி நேற்று நொய்டாவில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.