கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
போலாம்பட்டி வனச்சரகம், பொட்டப்பதி சராகம் பகுதியில் களப்பணியாளர்கள் தணிக்கையின் போது ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினரின் உத்தரவின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் குட்டி யானையின் உடலை கோவை மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். அதில், இறந்த ஆண் குட்டி யானையானது, பிறக்கும் போதே இறந்துள்ளதாக வனக்கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

போலாம்பட்டி வனச்சரகம், பொட்டப்பதி சராகம் பகுதியில் களப்பணியாளர்கள் தணிக்கையின் போது ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினரின் உத்தரவின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் குட்டி யானையின் உடலை கோவை மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். அதில், இறந்த ஆண் குட்டி யானையானது, பிறக்கும் போதே இறந்துள்ளதாக வனக்கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
