நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூடலூர் தாலூகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 4-ம் வார்டு மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நடக்கவும், வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி மற்றும் செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நோயாளிகள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், சாலையை சீரமைக்காமல், சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், பழுதடைந்துள்ள இந்த சாலையில், அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயக்க முடியாத நிலை உள்ளதால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கூடலூர் தாலூகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 4-ம் வார்டு மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நடக்கவும், வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி மற்றும் செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நோயாளிகள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், சாலையை சீரமைக்காமல், சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், பழுதடைந்துள்ள இந்த சாலையில், அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயக்க முடியாத நிலை உள்ளதால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.