பொய்யான தகவலை கூறினால் மானநஷ்ட வழக்கு: ஓ.பி.எஸ்., க்கு எச்சரிக்கை

அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த என்னை எந்தவித காரணமும் இல்லாமல் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தில் அதிகளவு பணத்தை சேர்த்த தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் தான் பத்து லட்சம் கையாடல் செய்ததாகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்ம் விளக்கம் அளித்துள்ளார். பத்து லட்சம் செலவு செய்ததற்கான கணக்கு தன்னிடம் உள்ளது. 

முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவின் பேரிலே பணத்தை சங்கத்திற்காக செலவு செய்தேன். மேலும், நான் ஊழல் செய்ததாகக் கூறினால் ஓ.பி.எஸ் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன். இவர்களுடன் இனி அ.தி.மு.க.,வில் இருக்கமாட்டேன். விரைவில் அரசியல் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன். 

நல்லவர்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கருதுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...