அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.
கோவை: அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த என்னை எந்தவித காரணமும் இல்லாமல் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தில் அதிகளவு பணத்தை சேர்த்த தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் தான் பத்து லட்சம் கையாடல் செய்ததாகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்ம் விளக்கம் அளித்துள்ளார். பத்து லட்சம் செலவு செய்ததற்கான கணக்கு தன்னிடம் உள்ளது.
முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவின் பேரிலே பணத்தை சங்கத்திற்காக செலவு செய்தேன். மேலும், நான் ஊழல் செய்ததாகக் கூறினால் ஓ.பி.எஸ் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன். இவர்களுடன் இனி அ.தி.மு.க.,வில் இருக்கமாட்டேன். விரைவில் அரசியல் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன்.
நல்லவர்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கருதுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த என்னை எந்தவித காரணமும் இல்லாமல் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தில் அதிகளவு பணத்தை சேர்த்த தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் தான் பத்து லட்சம் கையாடல் செய்ததாகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்ம் விளக்கம் அளித்துள்ளார். பத்து லட்சம் செலவு செய்ததற்கான கணக்கு தன்னிடம் உள்ளது.
முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவின் பேரிலே பணத்தை சங்கத்திற்காக செலவு செய்தேன். மேலும், நான் ஊழல் செய்ததாகக் கூறினால் ஓ.பி.எஸ் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன். இவர்களுடன் இனி அ.தி.மு.க.,வில் இருக்கமாட்டேன். விரைவில் அரசியல் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன்.
நல்லவர்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கருதுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.