இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலணி 76-வது வார்டு பகுதியில் கடந்த 2016-ல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாடினர்.
மேலும், இதனைக் கண்டிக்கும் வகையில் தலையில் புத்தகத்தைச் சுமந்த படி வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட படிப்பகத்தை திறக்க காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உடனடியாக படிப்பகத்தை திறக்க கோரி மனு அளித்துள்ளோம். படிப்பகத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றனர்.
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலணி 76-வது வார்டு பகுதியில் கடந்த 2016-ல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்பட்டது.
இந்த நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாடினர்.
மேலும், இதனைக் கண்டிக்கும் வகையில் தலையில் புத்தகத்தைச் சுமந்த படி வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட படிப்பகத்தை திறக்க காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உடனடியாக படிப்பகத்தை திறக்க கோரி மனு அளித்துள்ளோம். படிப்பகத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றனர்.