பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்ககோரி மனு

இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலணி 76-வது வார்டு பகுதியில் கடந்த 2016-ல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாடினர்.

மேலும், இதனைக் கண்டிக்கும் வகையில் தலையில் புத்தகத்தைச் சுமந்த படி வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட படிப்பகத்தை திறக்க காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உடனடியாக படிப்பகத்தை திறக்க கோரி மனு அளித்துள்ளோம். படிப்பகத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...