கனிமொழி, ஆ. ராசா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. அப்போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சராகப் பதவி வகித்த தி.மு.க.வின் ஆ.ராசா 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தினை நிரூபிக்க அரசு தரப்பு முயலாததால், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...