2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
2ஜி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. அப்போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சராகப் பதவி வகித்த தி.மு.க.வின் ஆ.ராசா 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தினை நிரூபிக்க அரசு தரப்பு முயலாததால், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்தது தி.மு.க. அப்போது, தொலைத்தொடர்பு துறை அமைச்சராகப் பதவி வகித்த தி.மு.க.வின் ஆ.ராசா 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்ய உத்தரவிட்டார் எனவும், இதன் காரணமாக ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது.
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் டெல்லி சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தினை நிரூபிக்க அரசு தரப்பு முயலாததால், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தைப் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.