பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய இ.எஸ்.ஐ.

தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவை: தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ கிளை அலுவலகம் சார்பில் மாதாந்திர உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த ஞானபிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆரோக்கிய மேரி (36) என்ற மனைவியும், லூர்து ஜெரோம் (15) என்ற மகனும், மெர்லின் ஜோய்ஸ்(14) என்ற மகளும் உள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனமானது இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் பதிவு செய்து அவருக்கான சந்தா தொகையினை செலுத்தி வந்தது. 

இந்த நிலையில், ஞானபிரபு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பணியில் இருக்கும் போது திடீரென உயிர் இழந்தார். இதில் இ.எஸ்.ஐ. நிறுவனம் விசாரணை மேற்கொண்டது. 

விசாரணை முடிவடைந்த நிலையில் அவரின் குடும்பத்திற்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணை மற்றும் நிலுவை தொகை வழங்க இ.எஸ்.ஐ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அந்நிறுவனத்தின் துடியலூர் கிளை மேலாளர் கோவிந்தராஜ் ரூ.2,19,450-ஐ உயிரிழந்த ஞானபிரபுவின் குடும்பத்திற்கு வழங்கினார்.

இதன் மூலம் அக்குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...