வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தனியார் நிறுவனம் முற்றுகை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


கோவை: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

சாய்பாபா காலனி பகுதியில் சாஜித்குமார் என்பவர் பி.எஸ்.என். மேன் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் சார்பில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். மேலும், பாதிப்பணம் செலுத்தியதும் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டதாகவும், விசா கிடைத்தவுடன் மீதப்பணத்தை செலுத்த வேண்டுமெனவும் அந்நிறுவனத்தினர் விண்ணப்பித்தவர்களிடம் கூறியுள்ளனர். 

வெளிநாடு செல்வதற்கான இதுபோன்ற பல்வேறு நடைமுறைகள் முடிவடைந்து, பல மாதங்களாகியும் எந்த பதிலும் இல்லாததால், பணத்தைச் செலுத்தியவர்கள் அந்நிறுவனத்தை அணுகியுள்ளனர். ஆனால், முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று பி.எஸ்.என் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் செலுத்திய பணத்தை உடனடியாக தர வேண்டுமெனவும், இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய அந்நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாய்பாபா காலனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களை விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...