சூலூர் அருகே விபத்து: இருவர் பலி

சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை: சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). கோவையிலிருந்நு சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி மினி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் கார்த்திக் (21), பிவிக்குமார்(18) ஆகிய இருவரும் இருந்தனர். 



இதே போல், ராஜகிருஷ்ணன் என்பவர் சூலூரிலிருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி ரங்கநாதபுரம் அருகே வந்த எதிரே வந்த மினி ஆட்டோவும் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி ஆட்டோவும்-வில் வந்த கார்த்திக்ராஜா, கார்த்தி ஆகிய இரண்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிவிக்குமார் கழுத்தில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த ராஜகிருஷ்ணன் என்பவர் தப்பியோடினார். 

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...