சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை: சூலூர் அருகே இன்று மினி ஆட்டோவும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). கோவையிலிருந்நு சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி மினி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் கார்த்திக் (21), பிவிக்குமார்(18) ஆகிய இருவரும் இருந்தனர்.

இதே போல், ராஜகிருஷ்ணன் என்பவர் சூலூரிலிருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி ரங்கநாதபுரம் அருகே வந்த எதிரே வந்த மினி ஆட்டோவும் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி ஆட்டோவும்-வில் வந்த கார்த்திக்ராஜா, கார்த்தி ஆகிய இரண்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிவிக்குமார் கழுத்தில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த ராஜகிருஷ்ணன் என்பவர் தப்பியோடினார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(26). கோவையிலிருந்நு சமையல் பாத்திரங்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி மினி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அந்த வாகனத்தில் கார்த்திக் (21), பிவிக்குமார்(18) ஆகிய இருவரும் இருந்தனர்.

இதே போல், ராஜகிருஷ்ணன் என்பவர் சூலூரிலிருந்து லாரியை ஓட்டி வந்தார். இந்த லாரி ரங்கநாதபுரம் அருகே வந்த எதிரே வந்த மினி ஆட்டோவும் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி ஆட்டோவும்-வில் வந்த கார்த்திக்ராஜா, கார்த்தி ஆகிய இரண்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிவிக்குமார் கழுத்தில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரியை ஓட்டி வந்த ராஜகிருஷ்ணன் என்பவர் தப்பியோடினார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.