சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கேரள அரசு அறிமுகம் செய்துள்ள "பண்டி கூட்" (பெருச்சாளி) என்ற ரோபாவை போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்கள் அனைவரையும் "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்" என மத்திய அரசு அறிவித்து வழங்கியுள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவிற்கு அனுப்பி அங்கு எவ்வாறு ரோபோ செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தூய்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கி மறு வாழ்விற்கு உத்தரவளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கேரள அரசு அறிமுகம் செய்துள்ள "பண்டி கூட்" (பெருச்சாளி) என்ற ரோபாவை போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்கள் அனைவரையும் "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்" என மத்திய அரசு அறிவித்து வழங்கியுள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவிற்கு அனுப்பி அங்கு எவ்வாறு ரோபோ செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தூய்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கி மறு வாழ்விற்கு உத்தரவளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.