சாக்கடை கழிவுகளை நீக்க ரோபோக்களை பயன்படுத்துங்கள்

சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



கேரள அரசு அறிமுகம் செய்துள்ள "பண்டி கூட்" (பெருச்சாளி) என்ற ரோபாவை போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்கள் அனைவரையும் "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்" என மத்திய அரசு அறிவித்து வழங்கியுள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவிற்கு அனுப்பி அங்கு எவ்வாறு ரோபோ செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தூய்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கி மறு வாழ்விற்கு உத்தரவளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...