அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குரங்கணி காட்டுத்தீ தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை பிடித்த காட்டுத் யில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில், 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குரங்கணி காட்டுத்தீ பற்றி இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது. மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத பாதையில் அனைவரும் சென்றுள்ளனர்," என்றார்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை பிடித்த காட்டுத் யில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில், 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குரங்கணி காட்டுத்தீ பற்றி இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்து முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது. மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாத பாதையில் அனைவரும் சென்றுள்ளனர்," என்றார்.