நெறி சார்ந்த தமிழ்நாட்டுக்காக என்னை அர்ப்பணிக்கப் போகிறேன் - நாஞ்சில் சம்பத்

நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்

திருப்பூர் : நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு தன்னை அர்ப்பணிக்கப் போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். 

திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று திருப்பூர் சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

அவமானங்களையும், ஆபத்துகளையும் தந்து கொண்டிருந்த பொது வாழ்வில் இருந்து விலகிவிட்டேன். தினகரனுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றப் போவதில்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் எனக்கு இனி வேலை இல்லை என்று துண்டை உதறி தோளில் போடுவதைப் போல் வந்து விட்டேன்.

 

இனி எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை. இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு சென்று சேர்க்கும் வகையில் இனி என் பணிகள் தொடரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனை தீர்க்கும் வகையில் நெறி சார்ந்த தமிழ்நாட்டை உருவாக்கும் ஒரு வேள்வி பணிக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். ராகுல்காந்தி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் கருத்தை தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை விசயத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியதும், அதே போன்று அ.தி.மு.க., தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவதும் வரவேற்கத்தக்கது. 

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்துச் சென்று பிரதமர் வீட்டின் முன்பாக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தினகரனின் எதிர்கால செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...