நீலகிரியில் சிறுத்தைப் புலி தாக்கியதில் முதியவர் கவலைக்கிடம்

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தைப் புலி தாக்கியதால் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்ட மாவட்டமாகும். இதனால், வனவிலங்குகள் அடிக்கடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வழக்கம். இப்படி வரும் வன விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள தாம்பட்டி சந்திப்பில் சுந்தர் (60) என்ற முதியவரை சிறுத்தை புலி ஒன்று தாக்கியதாக அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



சம்பவத்தின் போது முதியவர் ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது அந்த முதியவர் முகம், கழுத்து பகுதியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். 

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள்,  மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...