காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது : ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பி.எஸ்.பதில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார்.

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அழுத்தம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் உள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்துள்ளார். 

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

விவாதம் தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் அவகாசம் உள்ளது. வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம்.' என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...