அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் கருணாநிதி

அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேநேரம், கருணாநிதியின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகும். அண்மையில் கருணாநிதி தன் கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்பில்’ வெளியானது.

இந்தநிலையில், கருணாநிதி நேற்று இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு, நேற்று இரவு 8.40 மணிக்கு அறிவாலயத்துக்கு தன்னுடைய காரில் கருணாநிதி வந்தார். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

அறிவாலயத்தில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்ற அவர், அங்கு 10 நிமிடம் இருந்தார். தன் அறையைச் சுற்றிப்பார்த்து, உற்சாகம் அடைந்த கருணாநிதி, பின்னர் அங்கிருந்து, புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு கருணாநிதி, அறிவாலயத்துக்கு வந்து சென்றார். அதன் பின்னர், நேற்று மீண்டும் அவர் அறிவாலயம் வந்து சென்றுள்து குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...