மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது ஆந்திர அரசு

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின் போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு தலைநகரான ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்குச் சென்றுவிட்டது.

இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகராக அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தபோது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது கைவிடப்பட்டது.

மக்களவையில் தற்போது 539 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு மட்டும் 274 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களை விட அதிகமாகும். மேலும், சில கூட்டணிக் கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்.

எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்பு உள்ளது. எனினும், தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க., இடைத்தேர்தல் தோல்விகளால் ஒரு சில எம்.பி.க்களை இழந்தது. இப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...